கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி சிரிக்க வைத்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்குபெற்று நாள் ஒன்றிற்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக வாங்கினாராம். தற்போது திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.
தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் நிஷா மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலத்தில் இறங்கி உதவிகள் செய்து வருகிறார். தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் உயிர்க்கு அச்சம் விளைவித்தது. தொடர்ந்து புயலால் மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அத்யாவசிய தேவைகளுக்குக்கே அல்லல்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். சூர்யா – கார்த்தி இருவரும் இணைந்து ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினர். இந்நிலையில் அறந்தாங்கி நிஷா புயலால் வழவராம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை கொடுத்து உதவி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க திருச்சியில் இருந்து சென்னை வந்திருக்கிறேன். ஆயிரம் பேருக்கு உணவு வழங்க தாம்பரத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், அதை கொண்டுப்போய் கொடுக்க எந்த வாகனங்களையும் வாடகைக்கு தர மறுக்கிறார்கள். நாங்கள் திருச்சியில் இருந்து வருகிறோம். சாப்பாடு மட்டும் தாம்பரத்தில் செய்ய சொல்லி அங்கிருந்து சாப்பாடு எடுத்துச் செல்ல வண்டி வாடைக்கு கேட்டதற்கு யோசிக்கிறார்கள்.
அதனால் வேறு வழி இல்லாமல் எங்களுடைய காரிலேயே உணவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு செல்கிறோம். வெள்ளத்தால் வண்டி ஒண்ணும் மூழ்கிடாது. நாங்கள் எங்களுடைய வண்டிலையே போயிட்டு திரும்பி வந்து அந்த வீடியோவையும் போடுகிறோம். தயவுசெய்து இது மாதிரி நேரத்தில் கேட்டால் உதவி செய்யுங்கள். யாரும் முடியாது என்று மறுக்காதீர்கள். உயிருக்கு போராடும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்திடுங்கள் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.