தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரும் டாப் அந்தஸ்தில் இருந்து வருபவருமான நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது .
இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்த படம் வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க திரிஷா நடிக்கிறார் .
மேலும், என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு இந்த திரைப்படத்தில் திரிஷா ஜோடியாக சேர்ந்து அஜித்துடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பிரசன்னாவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகரான அர்ஜுன் தாஸ் அஜத்துடன் நடித்திருப்பது குறித்து நெகிழ்ச்சியாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவுதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நான் சினிமா வாய்ப்பு தேடிச் சென்னைக்கு வந்த புதிதில் அஜித்தோட மேனேஜர் ஆன சுரேஷ் சந்திராவோட டீம்ல தான் வேலை கிடைத்தது. அதன் மூலமா பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்திக்க வேண்டிய வாய்ப்பு எனக்கு தேடி வந்துச்சு.
அஜித் சார் கூட நான் ரொம்பவும் நெருக்கமான வேலை செஞ்சிருக்கேன். அவருடைய சூட்டிங் செட்டுக்கு போறது மார்க்கெட்டிங் செல்வது இப்படி பல வேலைகளை அவரோட படத்துக்காக செய்துள்ளேன். அப்படித்தான் வீரம் படத்தோட டீசர் நான் தான் அப்லோட் பண்ணுனேன். அதன் பின்னர் மாஸ்டர் படம் பார்த்துவிட்டு அஜித் சார் எனக்கு போன் செய்து நாம் இருவரும் விரைவில் சேர்ந்து பணியாற்றலாம் அப்படின்னு என்கிட்ட சொன்னாரு .
ஆனால், அது இப்ப நிஜமாகிடுச்சு. ஆம் நான் இப்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அவருடன் நடித்திருக்கிறேன். மேலும் அந்த பதிவில் அஜித் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றி என கூறி அர்ஜுன் தாஸ் பதிவிட்டு இருக்கிறார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அர்ஜுன் அஜித்துக்கு வில்லன் ரோலில் தான் நடிக்கிறார் என திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். அஜித்துடன் அர்ஜுன் தாஸ் மோத போகும் அந்த காட்சிகளை திரையில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.