சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், விஜய் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதன்பின்னர், விஜய் பற்றிய விஷயங்கள் தான் இணையதளத்திலும் தொலைக்காட்சி சேனலிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய் பற்றி பிரபலங்கள் பேசியது முதல் விஜயின் புகைப்படங்கள் மற்றும் பழைய பேட்டிகள் வரை இணையதளத்தில் வீடியோக்களாக வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
அந்த வகையில், நடிகர் அருண் பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜியுடன் நான் சண்டை போட்டு இருக்கிறேன். நிறைய பிரச்சனை இருக்கு, ஆனால் இந்த விஷயத்தில் அவர் செய்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள். பொதுவாக, சினிமாவில் தன்னுடைய காலம் முடிந்த பின் தான் அரசியலில் இயங்குவார்கள். ஆனால், விஜய் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போதே துணிந்து இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அதற்கு, என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். விஜய் குறித்து நடிகர் அருண்பாண்டியன் பேசியது தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
துரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக…
இந்திய இயக்குனர் “ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை…
This website uses cookies.