பிறந்த உடன் தத்து கொடுக்கப்பட்ட அரவிந்த் சாமி.. அவரது சகோதர, சகோதரியுடன் எடுத்த ஒரே புகைப்படம் இதுதான்..!

அரவிந்த்சாமியின் அழகில் மயங்காத பெண்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு எவர் கிரீன் ஹீரோவாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார். இவர் முன்னதாக பொழுதுபோக்கிற்காக மாடல் துறையில் நுழைந்தார். முதன்முதலாக இவர் நடித்த காபி விளம்பரத்தை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் தளபதி படத்தில் பெரிய ஸ்டாராக வலம் வந்த ரஜினியின் தம்பியாக நடிக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்தார்.

இதனிடையே, ஆண் அழகன் அரவிந்த் சாமி சாக்லேட் பாய் ஆக பம்பாய் படத்தின் மூலமாக அத்தனை பெண் ரசிகர்களையும் வளைத்து போட்டார். இவர் 1991ம் ஆண்டு தளபதி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து ரோஜா, மின்சார கனவு, அலைபாயுதே, என் சுவாசக் காற்றே, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

கதாபத்திரங்கள் தேர்வு செய்வதில் அதிகம் கவனம் செலுத்தும் அவர் வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

இவர் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவருக்கு ருத்ரா,ஆதிரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

முன்னதாக, பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு நடிகர் அரவிந்த்சாமி குறித்து பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். நிறைய சீரியல்களில் நடித்த நடிகரான டெல்லி குமார் தான் அரவிந்த்சாமியின் தந்தை என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அரவிந்த்சாமியின் தந்தை வி.டி.சுவாமி தான் இவர் பெரிய தொழிலதிபர் என்றும், இவருடைய மனைவி ஒரு பரதநாட்டிய கலைஞர் என்றும், இவருடைய வளர்ப்பு மகன்தான் அரவிந்தசாமி என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், செய்யாறு பாலு இது குறித்து அரவிந்த்சாமி யாரிடமும் சொன்னதும் கிடையாது அரவிந்த்சாமி பிறந்ததும் டெல்லி குமார் அவருடைய உறவினரான வி.டி.சுவாமியிடம் தத்து கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக அரவிந்த்சாமி தனது சொந்த வாழ்க்கை குறித்து யாரிடமும் வெளிப்படையாக பேசியதில்லை என்று பேட்டியில் செய்யாறு பாலு தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, சீரியல் நடிகர் டெல்லி குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அரவிந்த்சாமி குறித்த ரகசியத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். அதாவது, அரவிந்த்சாமி தன்னுடைய மகன்தான் என்றும், அவர் பிறந்த உடனே அவரை தன் மனைவியின் அக்காவுக்கு தத்து கொடுத்துவிட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், அரவிந்த்சாமி என் மகன் தான் அவரைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் உண்மை தான். அதில், மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றும், குடும்பத்தில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி என்றால் மட்டும் அரவிந்த்சாமி கலந்து கொள்வார் என டெல்லி குமார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அரவிந்த்சாமி தன்னுடைய சகோதர, சகோதரியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட அரவிந்த்சாமி தன்னுடைய கல்லூரி பருவத்தில் தான் சகோதரி மற்றும் சகோதரரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

4 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

4 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

4 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

5 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

6 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

7 hours ago

This website uses cookies.