நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்… விக்ரமனை சீண்டிய அசீம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் விக்ரமன். இவர் ஊடகவியலாளராக இருந்து பின்னர் அரசியலில் இறங்கி விடுதலை சிறுத்தை கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். அக்கட்சியின் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளியாகியது. அந்த நிகழ்ச்சியில் சமூக நலன் சார்ந்த பல கருத்துக்களை பேசி நல்லவர் போல் நடித்து வேஷம் போட்டு தான் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார் விக்ரமன் என பல சமூகவலைதளவாசிகள் கொந்தளித்துள்ளார்கள்.

ஆம், விஷயம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் பெண் விக்ரம் தன்னை காதலித்து ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து, ஜாதிய ரீதியில் அசிங்கமாக பேசி, இதுவரையிலும் 12 லட்சத்திற்கு மேல் பணம் பறித்து, உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்துகொள்ள தூண்டிய விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு பரபரப்பை கிளப்பினார்.

மேலும் தன்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்கள் பல பொருட்டுகளை வாங்கியுள்ளார். அத்துடன் விக்ரமன், தன்னுடைய மேனேஜர் என்று ஒரு பெண்ணை எனக்கு அறிமுகம் செய்துவிட்டு , அந்த பெண்ணுடன் தாகத உறவில் இருந்தார். இந்த விஷயம் கடைசியில் எனக்கு தெரியவந்தது. என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது போன்று சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உறவில் இருந்துள்ளார் எனக்கூறி விக்ரமன் பெண்களுடன் லீலை செய்த ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாய் பரவி வைரலாக விக்ரமனை எல்லோரும் மோசமாய் விமர்சித்து வருகிறார்கள். அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்” ( என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும்) – அசீம் என கூறி பதிவிட்டு விக்ரமனை மறைமுக சீண்டியுள்ளார். அசீமின் ரசிகர்கள் இதனை ஆதரித்து விக்ரமன் தாக்கப்பட்டார் என கூறி கிண்டலடித்து வருகிறார்கள்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.