“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று கூறியது கர்நாடகா மாநிலத்தில் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியது. அம்மாநிலத்தில் “தக் லைஃப்” திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கூறினர். எனினும் கமல்ஹாசன், “மன்னிப்பு கேட்க முடியாது” என திடமாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று நேச்சுரல்ஸ் என்ற ஐஸ் கிரீம் கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் நடிகர் அசோக் செல்வன். அப்போது அவரிடம் கமல்ஹாசன் கன்னட மொழி பற்றி பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அசோக் செல்வன் “அது வாத்தியார் மிகவும் அன்போடு கூறிய விஷயம். எல்லோருமே ஒரே குடும்பம் என்ற அர்த்தத்தில்தான் அவர் அதனை கூறினார். அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற அர்த்தத்தில்தான் அவர் அவ்வாறு கூறினார். எப்போதும் அரசியல்வாதிகள் இது போன்ற பிரச்சனைகளை கிளப்புவார்கள். ஆனால் அதையும் தாண்டி படம் என்பது ஒரு பொழுதுபோக்குதான்” என மிகவும் வெளிப்படையாக பதிலளித்தார்.
சர்ச்சையான நித்யா மேனன் வீடியோ மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், தமிழிலும் பல முன்னணி நடிகர்களின்…
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…
தவமாய் தவமிருந்து சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…
This website uses cookies.