“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று கூறியது கர்நாடகா மாநிலத்தில் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியது. அம்மாநிலத்தில் “தக் லைஃப்” திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கூறினர். எனினும் கமல்ஹாசன், “மன்னிப்பு கேட்க முடியாது” என திடமாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று நேச்சுரல்ஸ் என்ற ஐஸ் கிரீம் கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் நடிகர் அசோக் செல்வன். அப்போது அவரிடம் கமல்ஹாசன் கன்னட மொழி பற்றி பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அசோக் செல்வன் “அது வாத்தியார் மிகவும் அன்போடு கூறிய விஷயம். எல்லோருமே ஒரே குடும்பம் என்ற அர்த்தத்தில்தான் அவர் அதனை கூறினார். அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற அர்த்தத்தில்தான் அவர் அவ்வாறு கூறினார். எப்போதும் அரசியல்வாதிகள் இது போன்ற பிரச்சனைகளை கிளப்புவார்கள். ஆனால் அதையும் தாண்டி படம் என்பது ஒரு பொழுதுபோக்குதான்” என மிகவும் வெளிப்படையாக பதிலளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.