நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை நேற்று முன்தினம் திருமணம் செய்துக்கொண்டார். அசோக் செல்வன் திருமணம் செய்துக்கொண்டதை அவரது தீவிர பெண் ரசிகைகளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சில இளம் பெண்கள் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனை மோசமாக விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள். எங்ககிட்ட இல்லாதது அவகிட்ட அப்படி என்ன இருக்கு? அவளுக்கு நிக்க கூட நாதி இல்லை. அந்த உடம்புல ஒன்னுமே இல்லை. அத வச்சி என்ன பண்றது என மிகவும் மோசமாக பாடி shaming செய்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதற்கு சில ஆண்கள் அவங்க கிட்ட ரூ. 250 கோடி சொத்து இருக்கு உங்கிட்ட இருக்கா? ஏன் கேவலமா பொறாமை பிடித்து அலையுறீங்க என திட்டி தீர்த்தனர்.
இதையடுத்து அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு ” இந்த உலகத்திலே மிக அழகான பெண்” என கேப்ஷன் கொடுத்து கிண்டல் செய்தவர்களுக்கு செருப்படி பதில் கொடுத்தார். இந்நிலையில் தற்போது திருமண வரவேற்பு விழாவில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், அட பாவிங்களா? இந்த பொண்ணையா குறை சொன்னீங்க? அவ அழகுக்கு என்னடா குறை? தங்க சிலைடா” என வர்ணித்து தள்ளியுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.