நடிகை அதுல்யா ரவி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். ‘காதல் கண்கட்டுதே’ என்னும் ததிரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு நாடோடிகள் 2, எண்ணித் துணிக, வட்டம், கடாவர் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது ‘டீசல்’ படத்தில் நடித்து வருகிறார்.
இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அதுல்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி தனது தோழியான சுபாஷினியுடன் இணைந்து பாஸ்போர்ட்டையும், பணத்தையும் திருடியது தெரியவந்தது.
சம்பளம் தருவது தொடர்பாக அதுல்யாவுக்கும், பணிப்பெண்ணுக்கும் ஏற்கனவே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.அந்த கோபத்தில் அதுல்யா வெளிநாடு செல்வதைத் தடுக்க பாஸ்போர்ட்டை பணிப்பெண் திருடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.