தமிழ் சினிமாவில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து,பின்பு ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் அட்லீ.ராஜா ராணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,அடுத்தடுத்து படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.
அதன் பின்பு நடிகர் விஜயை வைத்து தெறி மெர்சல்,பிகில் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.சமீபத்தில் பாலிவுட்டில் அடியெடுத்து ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி,இந்திய அளவில் புகழின் உச்சிக்கு சென்றார்.
இவர் அடுத்தடுத்து பாலிவுட்டில் உள்ள பிரபல ஹீரோக்களை வைத்து படம் இயக்கியும் தயாரித்தும் வருகிறார்.இந்த சூழலில் ரசிகர்கள் பலருக்கும் தெரியாத அட்லீயின் இன்னொரு முகத்தை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: “சகுனி” பட இயக்குனர் திடீர் உயிரிழப்பு…சோகத்தில் உறைந்த திரையுலகம்..!
அதாவது,அட்லீ தன்னுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பலருக்கு சொந்தமாக பிளாட் வாங்கி கொடுத்துள்ளார்.தன்னுடைய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பாக இருந்த உதவி இயக்குனர்களுக்கு அவர் செய்த இந்த நெகிழ்ச்சியான செயலை, தற்போது பலர் பாராட்டி வருகின்றனர்.
இதற்கு முன்பு நடிகர் அஜித் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் நபர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.