சமீபத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் அலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சினிமாவில் உள்ள பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி வருகின்றனர்.
அப்படி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் ரஜிதா மற்றும் சுரேகா வாணி. இருவருமே குணச்சித்திர நடிகர்கள். இதில் ரஜிதா 90களில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு தோழியாக, கதநாயகியின் அக்கா என பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அஜித்தின் வீரம் படத்தில் கூட நடித்திருந்தார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்த அவர், தனக்கு நடந்த பாலியல் முயற்சி பற்றி பேசியுள்ளார். ஒரு நாள் இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ரயிலில் உள்ள கழிவறையை பயன்படுத்தினேன்.
கழிவறையில் இருந்து வெளியே வந்த போது, அங்க நின்றிருந்த ஒரு நபர் என்னை திடீர் என கட்டிப்பிடித்து, தொடக்கூடாத இடங்களை எல்லாம் தொட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதலில் அவனிடம் இருந்து என்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என முயற்சி செய்தேன்.
ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து தப்பித்து, ரயிலில் உள்ள என்னுடைய பெட்டிக்கு வந்துவிட்டேன். அன்றில் இருந்து இன்று வரை ரயிலில் பயணம் செய்ய பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.