பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஆயுஷ்மான் குர்ரானா பல்வேறு வெற்றி திரைப்படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களுக்கு பேவரைட் ஹீரோவாக இருந்து வருகிறார். ஆயுஷ்மான் குரானா தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகராக அறிமுகம் ஆனார்.
2016 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “விக்கி டோனர்” இந்த திரைப்படம் தான் தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “தாராள பிரபு” திரைப்படமாக தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. மேலும் “அந்தாதூன்” திரைப்படத்தின் ஹீரோவும் இவர்தான். இந்த திரைப்படம் தான் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் “அந்தகன்” தமிழ் திரைப்படம்.
இப்படி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமான ஹீரோவாக இருந்து வரும் ஆயுஷ்மான் குர்ரானா பற்றிய ஒரு ஷாக்கிங் தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, ஆயுஷ்மான் குர்ரானா ஊட்டச்சத்துக்காக மனைவி தாஹிரா காஷ்யப்பின் தாய்ப்பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்துக்காக தனது தாய்ப்பாலைத் திருடி புரோட்டீன் ஷேக்காக பயன்படுத்தினார். நான் பாங்காக் பயணத்திற்கு முன், தனது ஏழு மாத குழந்தைக்காக தாய் பாலை பாட்டிலில் எடுத்துவைத்து இருந்தேன். அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது. பின்னர் படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அவரிடம், தாய்ப்பால் பாட்டில் காணவில்லை என்று கேட்டேன்.
அதற்கு அவர் வினோதமான குலுங்கி மீசையைத் துடைத்துக்கொண்டே சிரித்தார். மேலும், நான் தான் திருடி குடித்தேன். அது சரியான வெப்பநிலையில் இருந்தது. அதிக சத்தானதாக இருந்ததால் குடித்துவிட்டதாக கூறினார். அன்றில் இருந்து, ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது, தாய்ப்பால் பாட்டிலை அவர் திருடாமல் இருப்பதற்காக மறைத்து வைத்து இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.