விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில், கோபி பாக்கியா மீது உள்ள வெறுப்பால் மறுமணம் செய்து கொண்டு தன்னுடைய அழகிய வாழ்க்கையை இழந்துவிட்டார் என்பது ரசிகர்கள் பலரின் கருத்தாகவே உள்ளது. இதனிடையே, இனியா பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து விட்டதால், அடுத்து அவர் என்ன படிக்கலாம் என்ற வாதம் வர கோபி ஒரு படிப்பை கூற அவரது மகளோ வேறு ஒரு படிப்பில் பிளானில் இருக்கிறார். இதற்கு பாக்யாவும், சப்போர்ட் செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கோபி தனது முன்னாள் மனைவி பாக்யாவை கட்டி அனைத்து முத்தம் கொடுக்கச் செல்ல அதை இனியா வீடியோவாக எடுக்கிறார்.
இந்த கலகலப்பான வீடியோ சாதாரணமாக எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதை மட்டும் ராதிகா பார்க்க வேண்டும் அப்போது கோபி கதை கதையாக உளறுவார் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், கெட்ட பையன் சார் இந்த கோபி என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.