சினிமா / TV

‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

அஞ்சலி, ரம்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், ஒரு டீனேஜ் பெண்ணின் வாழ்வு,அவளுக்குள் ஏற்படும் மாற்றங்கள்,ஆசைகள்,கனவுகள், வாழ்க்கையை பார்க்கும் கோணம் போன்றவற்றை வெளிப்படுத்தும் சமூக நோக்குச் செய்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால்,சில சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இதை எதிர்த்து வருகின்றனர்.
சங்கரன்கோவிலை சேர்ந்த மூன்று நபர்கள்,இந்த படத்தின் டீசர் சிறுமிகளை ஆபாசமாகக் காட்டுவதாகவும்,குழந்தைகளுக்கு எதிரான காட்சிகளை உள்ளடக்கியதாகவும் கூறி, யூடியூபில் இருந்து டீசரை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபால்,மத்திய அரசு தகவல் தொடர்புத்துறை மற்றும் கூகுள் இந்தியா ஆகிய தரப்பினருக்கு, டீசர் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால்,வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேட் கேர்ள் தற்போது சர்ச்சைக்குரிய திரைப்படமாக மாறியுள்ளதால் இந்த வழக்கின் முடிவை பொறுத்து இப்படம் வெளியாகுமா வெளியாகாத என்ற முடிவு தெரியவரும்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.