சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாலா. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை உருவாக்கி தந்த பெறுமை இவரைச் சேரும். விக்ரம் என்ற மாபெரும் கலைஞனை சேது திரைப்படத்தில் உருவாக்கி, நந்தா திரைப்படத்தின் மூலம் இன்று ஆஸ்கார் விருது வரை செல்லக் கூடிய அளவிற்கு சூர்யாவின் நடிப்பின் திறமையை வெளிஉலகிற்கு கொண்டு வந்தவர் தான் இந்த பாலா.
நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார். பெரும்பாலும் இவரது படங்கள் அனைத்து விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசுவதாகவே இருக்கும்.
இவருடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏனென்றால் இவர் படத்தில் நடிகர், நடிகைகளை அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றிவிடுவார்.
நடிகர்களிடம் திறமையான நடிப்பை வாங்குவதில் கைவந்த இயக்குனரான இவர், சில சமயங்களில் நடிகர்களிடம் இருந்து வேலை வாங்கும் பொழுது கொஞ்சம் கோபப்பட்டு கைநீட்ட கூடியவர் என்றும் தெரிகிறது. பாலாவிடம் அடிவாங்கி வளர்ந்த நடிகர்கள் ஏராளம். தற்போது உள்ள சூழ்நிலையில், ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கினால் இதுபோன்று அவர்களிடம் வேலை வாங்க முடியாது. சில சமயங்களில் கோபப்பட்டு கையை நீட்டினால் அதுவே பெரிய சர்ச்சையாக மாறிவிடும். இதனாலேயே பாலா சினிமாவில் மிகப் பிரபலம் ஆகாத திறமையான நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார் என்றும் தெரிகிறது.
இதனிடையே தற்போது பாலா பாலா பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்தால் அது அவர்களின் படமாக மாறிவிடும் என்பதால், பாலா முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்க தயங்குகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.
இயக்குனர் பாலா படம் எடுக்கும் விதம் எப்படி என திரையுலகில் பலருக்கும் தெரியும். படப்பிடிப்பில் டெரராக இருப்பார்.. நடிகர்கள் மீது ஈவு இரக்கம் எல்லாம் காட்டவே மாட்டார்.
அவருக்கு திருப்தி ஆகும் வரை ஒரே காட்சியை பல முறை எடுத்து நடிகர்களை சாவடிப்பார், உதவி இயக்குனர்களை போட்டு அடி வெளுப்பார்.. என பல நல்ல பேர்கள் அவருக்கு உண்டு.
அதனால்தான் அவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் முன்வருவது இல்லை. இனி அவர் கூப்பிட்டால் கூட சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா போன்றோர் அவரின் இயக்கத்தில் நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். சூர்யா கூட வணங்கான் படத்திலிருந்து சமீபத்தில் விலகினார். அதனால்தான் அதர்வா போன்ற சிறிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் நிலைக்கு பாலா ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், ஒரு முறை பாலாவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு IAS அதிகாரி ஒருவர் வந்துள்ளார். பாலா சார் சிறுது நேரத்தில் வந்துவிடுவார் வெயிட் பண்ணுங்க என்று அவரிடம் அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அப்போது இயக்குனர் பாலா வரும் நேரத்தில் அந்த IAS அதிகாரியை பார்த்து “யார் இந்த *” என்று பாலா கேட்டுள்ளாராம். இதனால் அந்த அதிகாரி சற்று அதிர்ச்சியடைந்துள்ளார். இதன்பின் ‘நீ ஒழுங்கா நடிக்கலனா கொரவளைய புடிச்சு கடிச்சிருவேன்’ என பாலா தெரிவித்துள்ளார்.
இதன்பின் வெளியே வந்த IAS அதிகாரி அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணனிடம் ‘ எனக்கு நடிப்பு வேண்டாம், பென்சன் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன் ‘ என்று தெரிவித்தாராம். இப்படி வாய்ப்பு கேட்டு வந்தவரை அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளார் பாலா.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.