‘நீ ஒழுங்கா நடிக்கலனா கொரவளைய புடிச்சு கடிச்சிருவேன்’.. நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற IAS அதிகாரியை தகாத வார்த்தையில் திட்டிய இயக்குனர் பாலா..!

சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாலா. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை உருவாக்கி தந்த பெறுமை இவரைச் சேரும். விக்ரம் என்ற மாபெரும் கலைஞனை சேது திரைப்படத்தில் உருவாக்கி, நந்தா திரைப்படத்தின் மூலம் இன்று ஆஸ்கார் விருது வரை செல்லக் கூடிய அளவிற்கு சூர்யாவின் நடிப்பின் திறமையை வெளிஉலகிற்கு கொண்டு வந்தவர் தான் இந்த பாலா.

நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார். பெரும்பாலும் இவரது படங்கள் அனைத்து விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசுவதாகவே இருக்கும்.
இவருடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏனென்றால் இவர் படத்தில் நடிகர், நடிகைகளை அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றிவிடுவார்.

நடிகர்களிடம் திறமையான நடிப்பை வாங்குவதில் கைவந்த இயக்குனரான இவர், சில சமயங்களில் நடிகர்களிடம் இருந்து வேலை வாங்கும் பொழுது கொஞ்சம் கோபப்பட்டு கைநீட்ட கூடியவர் என்றும் தெரிகிறது. பாலாவிடம் அடிவாங்கி வளர்ந்த நடிகர்கள் ஏராளம். தற்போது உள்ள சூழ்நிலையில், ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கினால் இதுபோன்று அவர்களிடம் வேலை வாங்க முடியாது. சில சமயங்களில் கோபப்பட்டு கையை நீட்டினால் அதுவே பெரிய சர்ச்சையாக மாறிவிடும். இதனாலேயே பாலா சினிமாவில் மிகப் பிரபலம் ஆகாத திறமையான நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார் என்றும் தெரிகிறது.

இதனிடையே தற்போது பாலா பாலா பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்தால் அது அவர்களின் படமாக மாறிவிடும் என்பதால், பாலா முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்க தயங்குகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

இயக்குனர் பாலா படம் எடுக்கும் விதம் எப்படி என திரையுலகில் பலருக்கும் தெரியும். படப்பிடிப்பில் டெரராக இருப்பார்.. நடிகர்கள் மீது ஈவு இரக்கம் எல்லாம் காட்டவே மாட்டார்.

அவருக்கு திருப்தி ஆகும் வரை ஒரே காட்சியை பல முறை எடுத்து நடிகர்களை சாவடிப்பார், உதவி இயக்குனர்களை போட்டு அடி வெளுப்பார்.. என பல நல்ல பேர்கள் அவருக்கு உண்டு.

அதனால்தான் அவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் முன்வருவது இல்லை. இனி அவர் கூப்பிட்டால் கூட சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா போன்றோர் அவரின் இயக்கத்தில் நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். சூர்யா கூட வணங்கான் படத்திலிருந்து சமீபத்தில் விலகினார். அதனால்தான் அதர்வா போன்ற சிறிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் நிலைக்கு பாலா ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், ஒரு முறை பாலாவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு IAS அதிகாரி ஒருவர் வந்துள்ளார். பாலா சார் சிறுது நேரத்தில் வந்துவிடுவார் வெயிட் பண்ணுங்க என்று அவரிடம் அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

அப்போது இயக்குனர் பாலா வரும் நேரத்தில் அந்த IAS அதிகாரியை பார்த்து “யார் இந்த *” என்று பாலா கேட்டுள்ளாராம். இதனால் அந்த அதிகாரி சற்று அதிர்ச்சியடைந்துள்ளார். இதன்பின் ‘நீ ஒழுங்கா நடிக்கலனா கொரவளைய புடிச்சு கடிச்சிருவேன்’ என பாலா தெரிவித்துள்ளார்.

இதன்பின் வெளியே வந்த IAS அதிகாரி அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணனிடம் ‘ எனக்கு நடிப்பு வேண்டாம், பென்சன் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன் ‘ என்று தெரிவித்தாராம். இப்படி வாய்ப்பு கேட்டு வந்தவரை அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளார் பாலா.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

19 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

21 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

21 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

21 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

22 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

22 hours ago

This website uses cookies.