தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இவர் இயக்கத்தில் தற்போது வணங்கும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இப்படத்தில் இருந்து நடித்து விலகிய நடிகை மமிதாவவை பாலா அடித்ததாக தகவல் ஒன்று வெளியானது. தன்னை இயக்குனர் பாலா அடிக்கவில்லை என அவரும் விளக்கம் கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இயக்குனர் பாலா குறித்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், பாலா கதை சொல்ல மாட்டார். நந்தா படத்தின் சமயத்தில் லைலா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக நான் அங்கே சென்றிருந்தேன்.
அந்த நேரத்தில், பாலா தன்னை கடுமையாக டார்ச்சர் செய்கிறார் என்று கூறி லைலா கதறி அழுதார். படத்திலிருந்து விலகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த லைலாவை சிலர் சமாதானம் செய்து வைத்தனர். அதன் பின்னர், படம் வெளியானதும் லைலா மிகவும் எமோஷனலாக பாலாவிடம் சென்று மன்னிப்பும் கேட்டார் என செய்யாறு பாலு தெரிவித்து இருந்தார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.