15-வயசுல பொண்ணு இருக்காம்? 2-வது மனைவியாகும் வரலட்சுமி குறித்து பயில்வான் OPENTALK..!

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே, கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தற்போது, இவர்களின் புகைப்படம் வைரலானது.

இந்நிலையில், இது குறித்து பேசிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சரத்குமார் எல்லாவற்றையும் துணிந்து நின்று எதிர்த்து போராடக் கூடியவர். இவரது குணம் தான் வரலட்சுமிக்கும். இவரை நாம் ஆண் என்று அழைக்கலாம். இரவு 12 மணிக்கு தான் வரலட்சுமி வீட்டுக்கு வருவார். அப்படி வரும்போது யாராவது சீண்டினால், அவ்வளவுதான் நடுரோடு என்று கூட பார்க்காமல் சண்டையிடுவார்.

மிகவும் தைரியமான பெண் இவர். வரலட்சுமிக்கு திருமணம் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அவருக்கு வயது 38 திருமணம் செய்து கொள்ள போகும் நிக்கோலாயிற்கு வயது 41 அவரது அப்பா நடத்தி வந்த தொழிலை தான் இவர் தற்போது செய்து வருகிறார். இவருக்கும், கவிதா என்ற கலிபோர்னியா நாட்டு அழகிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இவருக்கு 15 வயதில் மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இவருக்கு இரண்டாம் திருமணம் ஆகும். சரத்குமாருக்கு ஏற்ற மாப்பிள்ளை தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் என்னடா பதினோரு வருஷம் ஆச்சுன்னு சொல்றீங்க கல்யாணம் ஆகி பொண்ணுக்கு வயசு 15 ன்னு சொல்றீங்க எல்லா கணக்குமே இங்கு இடிக்குதே என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

9 minutes ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

1 hour ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

1 hour ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.