கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே, கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தற்போது, இவர்களின் புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், இது குறித்து பேசிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சரத்குமார் எல்லாவற்றையும் துணிந்து நின்று எதிர்த்து போராடக் கூடியவர். இவரது குணம் தான் வரலட்சுமிக்கும். இவரை நாம் ஆண் என்று அழைக்கலாம். இரவு 12 மணிக்கு தான் வரலட்சுமி வீட்டுக்கு வருவார். அப்படி வரும்போது யாராவது சீண்டினால், அவ்வளவுதான் நடுரோடு என்று கூட பார்க்காமல் சண்டையிடுவார்.
மிகவும் தைரியமான பெண் இவர். வரலட்சுமிக்கு திருமணம் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அவருக்கு வயது 38 திருமணம் செய்து கொள்ள போகும் நிக்கோலாயிற்கு வயது 41 அவரது அப்பா நடத்தி வந்த தொழிலை தான் இவர் தற்போது செய்து வருகிறார். இவருக்கும், கவிதா என்ற கலிபோர்னியா நாட்டு அழகிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இவருக்கு 15 வயதில் மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இவருக்கு இரண்டாம் திருமணம் ஆகும். சரத்குமாருக்கு ஏற்ற மாப்பிள்ளை தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்து ரசிகர்கள் என்னடா பதினோரு வருஷம் ஆச்சுன்னு சொல்றீங்க கல்யாணம் ஆகி பொண்ணுக்கு வயசு 15 ன்னு சொல்றீங்க எல்லா கணக்குமே இங்கு இடிக்குதே என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.