தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கிற்காக இவர் காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அஜித் பைக் பயணங்களை மேற்கொண்டு வந்தார்.
இப்படியிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்குமாரின் தந்தை மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
பல மேடைகளிலும் பேட்டிகளிலும் சர்ச்சையாகவும் அவதூறாகவும் பேசி வரும் பயில்வான் தற்போது அஜித் குமார் பைக் ரேஸ் செய்யாமல் அதை நிறுத்த காரணம் என்ன என்பதை சமீபத்திய நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
அதாவது, ரேசர் என்ற படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதன். சங்கங்களை குறை சொல்வதை நிறுத்துங்கள் என்றும், சினிமா தொழிலை கற்றுக்கொள்வதைவிட எப்படி வெளியிடுவது என்று கற்றுக்கொண்டு படம் எடுங்கள் என்று அறிவுரை கூறி இருக்கிறார்.
மேலும், விழாவில் பேசியபோது, அஜித்தாலே முடியல, பைக் ரேஸில் கலந்துக்கிறதுக்கு 7 வருடத்திற்கு முன்பு தன்னிடம் அஜித் புலம்பினார் எனவும், தனக்கு ஸ்பான்ஸ்சர் கிடைக்கவில்லை எனவும், அதற்கு முன்னாடி நிறைய பேசினார் என்றும், ஒரு பைக் 1 கோடி ரூபாய் இருந்ததால் தான் அஜித் ரேஸ் செய்வதை நிறுத்தினார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இதனை ரசிகர்கள் இது என்னடா புது புரளியா இருக்கு என கேளி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.