இதுக்கே வழி இல்லையாம் இதுல அது வேறயா.. அரங்கையே அதிரவைத்த BIGGBOSS ரவீனா தாஹா..!

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் .

ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பான “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் .

மேலும் படிக்க: ஃபேன் Girl சம்பவம்… அச்சு அசல் நயன்தாரா போல் மாறிய ரசிகை..! வைரலாகும் வீடியோ..!

அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் படிக்க: உச்ச நடிகையின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட நடிகை பிந்து மாதவி..!

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 91 நாட்களைக் கடந்த ரவீனா தற்போது, எலிமினேட் ஆகி வெளியே வந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மணிக்கு ஆதரவாக விளையாடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் இவர் மீது வைத்திருந்தனர். அவரது குடும்பத்தினர் கூட பிக் பாஸ் வீட்டிற்கு வரும்போது ரவீனாவை திட்டி தீர்த்தனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரை சென்று உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் என்ற ஆல்பம் பாடலின் நடித்துள்ள ரவிணா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அப்போது, CWC 5 நிகழ்ச்சி பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு போட்டியாளராக பங்கேற்பார்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, ரவீனா எனக்கு குக் வித் கோமாளி குழுவில் இருந்து ஒரு எபிசோடுக்கு வருவதற்காக கால் செய்து கூப்பிட்டார்கள். இப்போதுதான், ஜோடியின் இறுதிப்போட்டியில் சென்று கொண்டிருக்கிறது என்பது என்னால் போக முடியவில்லை. எனக்கு தெரிந்து நான் போவேனா என்று தெரியவில்லை. ஏனென்றால், எனக்கு நகைச்சுவை வர மாட்டேங்குது. அதை மறைச்சு பிரயோஜனம் இல்லை என்றும், அவ்வளவு நல்ல நல்ல கோமாளிகள் இருக்கும் போது நான் எதுக்கு என்று நினைக்கத் தோன்றுகிறது என ரவீனா தெரிவித்துள்ளார். மேலும், கோமாளி ஆகவே வழியில்லாமல் இதுல குக்காக வேற என்று கூறியிருக்கிறார்.

மேலும், விஜய் சார் மகன் இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்கப் போறீங்கன்னு பேட்டி ஒன்றில் கூறியது பற்றி பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதற்கு, ரவீனா ஐயா அந்த வீடியோவை திரும்பவும் பாருங்க எந்த நடிகருடன் நடிக்க ஆசை கேட்டாங்க விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை. ஆனால், நடிக்க முடியுமான்னு தெரியல அவர் பையன் கூடவாவது நடிக்க முடியுமான்னு பார்ப்போம் என்று தான் சொன்னேன். தயவுசெய்து அதை திருப்பிப் பாருங்க என்று காமெடியாக சிரித்தபடி பேசி அரங்கையே ரவீனா அதிர வைத்திருக்கிறார்.

Poorni

Recent Posts

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

1 minute ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

21 minutes ago

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

16 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

16 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

17 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

17 hours ago

This website uses cookies.