சினிமாவில் எண்பதுகளில் கொடி கட்டி பறந்த இயக்குனராக திகழ்ந்து பல வெற்றி படங்களில் நடித்தும், இயக்கியும் இயக்குனர் சிகரமாக திகழ்ந்து வருபவர் கே பாக்யராஜ்.
இவர் தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாக்கியராஜ் தன் மகன் சாந்தனுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் சரியான ஒரு இடத்தினை பாக்யராஜ் போன்று அவரது மகனால் பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் மகனின் கால்ஷீட் மற்றும் கதை விஷயத்தில் பாக்கியராஜின் தலையீடு அதிகமாக இருந்துள்ளதாம். அப்படி ஒரு முறை சாந்தனுக்கு வந்த வாய்ப்பினை மறுத்து கேரியரையே, தொலைக்க காரணமாய் இருந்துள்ளார் பாக்கியராஜ்.
அதாவது, சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய் ரோலில் முன்னதாக சசிகுமார் நினைத்து கதையை பாக்யராஜிடம் கூறியிருக்கிறார். ஆனால் கதை பாக்கியராஜிற்கு பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டாராம். அதன் பின் தான் ஜெய் அப்படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே, சுப்பிரமணியபுரம் படத்தில் சாந்தனு மட்டும் நடித்திருந்தால் அவரது கேரியர் வேறொரு இடத்திற்கு சென்றிருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.