விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டு TRPயில் இடம்பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. ஒரு சராசரி பெண்மணி குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்ப்புகள் குறித்து எதார்த்தமாக அமைக்கப்பட்ட இந்த தொடர், நாளடைவில் ஜவ்வு போல இழுப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
இந்த சீரியலில் முதன் முதலில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை ரோஷினி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதன்பின் சீரியலில் இருந்து விலகிய ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் தற்போது நடித்து வருகிறார்.
முதல் சில வாரங்களில் மக்களின் மனதை கவர முடியாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் கண்ணம்மாவாக மக்கள் மனதில் வினுஷா தேவி இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில், மலையாள தொடரான கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர் ஆரம்பத்தில் ஹிட்டாக ஓடியது.
ஆனால் இடையில் கதைக்களத்தில் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல ரசிகர்கள் தொடரை நிறைய கலாய்த்து வந்தார்கள். அட சீரியலை முடிங்கப்பா என ரசிகர்கள் கதறி நிறைய மீம்ஸ், வீடியோக்களை வெளியிட்டும் இயக்குனரை சாடியும் வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னணி மெகா தொடரான பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகியுள்ளதை
பார்த்த ரசிகர்கள் அட சூப்பர் நல்ல முடிவு என தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலின் தற்போதுள்ள நிலைப்படி இன்னும் ஓரிரு வாரங்களில் சீரியல் முடிவுக்கு வரும் என்றும், பாரதியின் நினைவுகளை மீட்டெடுக்க கண்ணம்மா போராடி வருகிறார்.
பாரதியின் நினைவுகள் பழைபடி மீண்டு வந்தபின், பாரதியியும் – கண்ணம்மாவும் இணைத்துவிட்டால், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என தகவல் வெளிவந்துள்ளது.சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது கூட இருவரும் இணைய போவதுபோல் தான் காட்டியுள்ளனர்.
மேலும், ஒருவழியாக இப்படி போகும் போக்கில் சீரியல்முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இயக்குநர் கிளைமேக்ஸை வைத்து புது பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹேமா டாக்டராகவும் லட்சுமி கலெக்டர்கவும், வளர்ந்துவிட்டதை கதையாக வைத்து பாரதி கண்ணம்மா 2வை எடுக்கவுள்ளாராம். பொறுந்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.