ஊரை விட்டு செல்லும் கண்ணம்மா.. ஐயோ… மறுபடியும் முதல்ல இருந்தா?.. முடியல, இதுக்கு ஒரு என்டே இல்லையா.. நெட்டிசன்கள் ஷாக்..!

இந்த வார பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரும் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்தனர்.

இதனிடையே, வெண்பாவுக்கு ரோகித்துடன் திருமணம் நடந்து விட்டது. ஹேமா & லெட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் என டிஎன்ஏ ரிசல்ட் வந்து விட்டது. பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்துவிட்ட நிலையில் குழந்தை ஹேமா, லெட்சுமி இருவரையும் அழைத்து கண்ணம்மா கண் காணாத இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்கிறார்.

கண்ணம்மா & குழந்தைகளை அழைத்து வர குடும்பத்துடன் பாரதி, கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். வீட்டில் கண்ணம்மா & குழந்தைகள் இல்லாமல் போவதை கண்டு கதறி அழும் பாரதி, கண்ணம்மாவை “எங்கே போய் தேடுவேன்” என தலையில் அடித்து கொள்கிறார்.

இனி கண்ணம்மா & குழந்தைகளை பாரதி தேடி கண்டு பிடிக்கும் படலம் பாரதி கண்ணம்மாவில் துவங்க உள்ளதால், ஐயோ… மறுபடியும் முதல்ல இருந்தா?.. முடியல, இதுக்கு ஒரு என்டே இல்லையா.. நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.