சினிமா / TV

என் படத்தை பார்த்துட்டு அந்த இயக்குனர் ஓங்கி அடிச்சாரு- சேரன் சொன்ன தரமான சம்பவம்!

தவமாய் தவமிருந்து

சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”. இதில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் பத்மபிரியா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் குடும்ப நலன் சார்ந்த பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சேரன், இத்திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஓங்கி அடித்த இயக்குனர்

இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு நாள் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன் ஆகிய நான்கு இயக்குனருக்கும் இத்திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினாராம். படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகிறார்களோ என்ற பதட்டத்தில் இருந்தாராம் சேரன்.

படம் முடிவடைந்த பிறகு நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்களாம். பத்து நிமிடம் கழித்து பாரதிராஜா, தான் அமர்ந்திருந்த இருக்கையை ஓங்கி அடித்து, “ச்சே, இப்படி ஒரு படம் நம்ம டைரக்ட் பண்ணாம விட்டுட்டோமே” என்றாராம். 

அதன் பின்னும் சில நிமிடங்கள் நால்வரும் மௌனமாக இருந்தார்களாம். அதன் பிறகு பின்னால் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த சேரனை அருகில் அழைத்து நால்வரும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார்களாம். இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் சேரன். 

Arun Prasad

Recent Posts

அரசியலில் சாதித்த எடப்பாடியை பேச ஆதவ் அர்ஜூனாவுக்கு தகுதி இருக்கா? கௌதமி ஆவேசம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலுக்கு நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி வருகை…

24 minutes ago

அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் போது மயங்கி விழுந்து மரணமடைந்த பக்தர் : அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது கங்கை அம்மன் திருவிழா, காவம்மா திருவிழா ஆகியவை போன்ற அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று…

59 minutes ago

எங்கயோ தப்பு நடந்திருக்கு;நான் அப்படி பண்ணவே இல்ல- கமல் விவகாரத்தில் சிவராஜ்குமார் ஓபன் டாக்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மே மாதம் 24 ஆம் தேதி…

1 hour ago

மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி தனக்கு தானே சூனியம்.. திமுக இனி 10 ஆண்டு ஆட்சிக்கு வராது!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, முதல்வர்…

1 hour ago

பாதிக்கப்பட்ட மாணவி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… ஞானசேகரனுக்கு ஆயுள் வழங்கியதற்கு ஜோதிமணி வரவேற்பு!

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பாடநூல், சீருடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட…

2 hours ago

தனது பிறந்தநாளில் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கும் செய்தியைச் சொன்ன இளையராஜா? வேற லெவல்!

இசைஞானி அவதரித்த தினம் இசைஞானி என்று இசை ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா இன்று தனது 82 ஆவது வயதில் அடி…

3 hours ago

This website uses cookies.