சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”. இதில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் பத்மபிரியா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் குடும்ப நலன் சார்ந்த பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சேரன், இத்திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு நாள் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன் ஆகிய நான்கு இயக்குனருக்கும் இத்திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினாராம். படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகிறார்களோ என்ற பதட்டத்தில் இருந்தாராம் சேரன்.
படம் முடிவடைந்த பிறகு நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்களாம். பத்து நிமிடம் கழித்து பாரதிராஜா, தான் அமர்ந்திருந்த இருக்கையை ஓங்கி அடித்து, “ச்சே, இப்படி ஒரு படம் நம்ம டைரக்ட் பண்ணாம விட்டுட்டோமே” என்றாராம்.
அதன் பின்னும் சில நிமிடங்கள் நால்வரும் மௌனமாக இருந்தார்களாம். அதன் பிறகு பின்னால் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த சேரனை அருகில் அழைத்து நால்வரும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார்களாம். இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் சேரன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.