அந்தப் பழக்கம் அதிகமாயிருச்சு.. வாழ்க்கையை தொலைத்த பிக்பாஸ் தாமரை..!

தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிலையில், தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார்.

தாமரை செல்வி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி, மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்ததால், இவர் மீது தனி எதிர்பார்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சிக்குள் இவர் வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார் என பலர் எதிர்பார்த்தனர். வரும் போது, கள்ளக்கபடம் இல்லாமல் இவர் பேசியது, நடந்து கொண்ட விதம் போன்றவை இவர் நடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தை மற்ற போட்டியாளர்களுக்கும் கூட வரவைத்தது. மேலும், பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியே வந்தார் தாமரை.

BB ஜோடிகள் நிகழ்ச்சியில், தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடனத்திறமையை வெளிக்காட்டி ஃபைனல் வரை வந்தார். ஒரு சில காரணங்களால், இவரால் வெற்றி கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது. தனியாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதன் மூலமும் தற்போது சம்பாதித்து வருகிறார்.

இந்த நிலையில், பிக்பாஸ் தாமரைக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சினிமா வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், ஓலை வீடு என அவரது சில மோசமான பக்கம் காட்டப்பட்டது. இதனால் அவருக்கு பலரும் உதவிகரம் நீட்டினார்கள். இதனிடையே, தொகுப்பாளரும் இசையமைப்பாராளரு மான ஜேம்ஸ் வசந்தன் முயற்சியில் தாமரை செல்வியின் குடும்பத்திற்கு வீடு ஒன்று அமைந்தது.

தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் தாமரை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பொம்மி சீரியலில் நடித்த வருகிறார், அன்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த தாமரை அதில், மதுவால் தான் தன் வாழ்க்கை இழந்ததாகவும் பேசி உள்ளார். ஷூட்டிங்கில் போய் நின்றபோது என்ன நடிக்கிறீங்க என்று கிண்டல் செய்த போது தான் தெரிந்தது பிக் பாஸ் வீட்டில் அத்தனை கேமராம முன்பாக நான் நடித்ததாக கிண்டல் செய்தார்கள். இங்கு ஒரு கேமரா முன் என்னால் நடிக்க முடியவில்லை என்று உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு தான் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை இல்லை. யாரோ ஒருவருக்காக யாரோ ஒருவர் மீம்ஸ் போடுகிறார். அதற்காக நாம் ஏன் வருத்தப்பட வேண்டும். நிறைய மது பழக்கம் அதிகமாகிவிட்டது. என் வாழ்க்கை மதுவால் நிறைய சிரமப்பட்டு இருக்கு, அதனால் நான் விவாகரத்து செய்துவிட்டேன். இன்று காதலித்து கல்யாணம் செய்துவிட்டு பிரிகிறார்கள். அது எதனால் என்று தெரியவில்லை. மதுவால் தான் நான் வாழ்க்கையை இழந்தேன். இப்போது, குட்டி குட்டி பசங்க கூட மது இல்லாமல் இருப்பதில்லை. பெண்கள் ரொம்ப பாவம், அவர்களின் சிரமம் ஆண்களுக்கு தெரிவதில்லை. மது அருந்திவிட்டு பெண்களை சிரமப்படுத்த கூடாது என்று தாமரை பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

15 minutes ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

46 minutes ago

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

3 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

3 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

4 hours ago

This website uses cookies.