பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், ஜவான் படத்திற்கு பின்னர் தான் அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு சென்று விட்டது என்று சொல்லலாம். அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றதாம்.
முன்னதாக கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்கள் இருந்து வந்தது. அதாவது, சிம்பு மற்றும் பிரபுதேவா உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியதற்குப் பின் பேட்டிகள் கொடுப்பதிலும் பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதிலும் நயன்தாரா தவிர்த்து வந்தார். சமீபத்தில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவான நேசிப்பாயா படத்தின் விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், நயன்தாரா ஏன் சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தை விமர்சகர் பகிர்ந்துள்ளார். ஒருமுறை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்று இருந்த நயன்தாராவிற்கென்று ஒரு சோபா போடப்பட்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் முன்னாள் காதலர் நடிகர் சிம்பு அங்கு வந்து அருகில் அமர்ந்துள்ளார். அது நயன்தாராவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிகழ்ச்சி, ஏற்பாடு செய்தவர்களுக்கு மெசேஜ் வேறு இடத்தில் சென்று நயன் அமர்ந்துள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கலாம் என முடிவெடுத்து நயன் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். ஆனால், நயன்தாரா அவர் தயாரிக்கும் படங்களில் மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விடாமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.