தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற நாவல் கதையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மக்களுக்காக ஒரு தனி படை அமைத்து அரசாங்கத்தை எதிர்த்து போராடும் ஒரு போராளியின் கதை.
இதில் கான்ஸ்டேபிளாக நடித்த சூரியின் நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சர்யப்படவைத்தது. சூரி தான் சந்திக்கும் இன்னல்கள் & அவமானங்களை கடந்து எப்படி சாதிக்கிறார் என்பதை கூறும் இப்படத்தை கதை பலருக்கும் பிடித்துவிட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
சுமார் 4 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த இப்படம் இன்று எதிர்பாராத சாதனை படைத்திருப்பது பார்த்து மெய்சிலிர்த்த படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அண்மையில் நடைபெற்ற இப்படத்தில் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விலை உயர்ந்த பரிசை வழங்கி இருக்கிறார்.அத்துடன் அவர்களுக்கு ஒரு பவுன் தங்க காசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.
இது அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது. இதே போன்று இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறனையும் தன்னுடன் சேர்ந்து கடினமாக உழைத்த உதவி இயக்குனர்களுக்கு ஆளுக்கு இரண்டு கிரவுண்ட் இடம் வாங்கி கொடுத்தார். தற்போது தயாரிப்பாளரும் தன் பங்கிற்கு கிட்டத்தட்ட படத்தின் லாபத்தில் கிடைத்த பணத்தை மிகப்பெரிய பரிசுகள் வழங்கி இப்படி கௌரவித்திருப்பது பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.