சினிமா / TV

பேசாம பேசாமயே இருந்திருக்கலாம்- வாண்டடாக வாய் கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட விஜய் தேவரகொண்டா?

விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சை பேச்சு

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது ஒவ்வொரு இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய அரசு ஆப்ரேஷன் சிந்தூரை களமிறக்கியது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் போர் மேகம் சூழ்ந்தது. மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்த இப்போர் அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு கட்டத்தில் அமைதி கண்டது. 

இந்த பயங்கரவாத தாக்குதலை அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் கண்டித்து வந்தனர். அந்த வகையில் விஜய் தேவரகொண்டா “ரெட்ரோ” திரைப்பட விழாவின் போது பஹல்காம் தாக்குதலையும் பழங்குடியின தாக்குதலையும் ஒப்பிட்டுப் பேசினார். அவர் அவ்வாறு பேசியது எதிர்ப்பலைகளை கிளப்பியது. விஜய் தேவரகொண்டா பழங்குடியினரை அவமதித்து பேசியுள்ளார் என கண்டனங்கள் கிளம்பியது. இந்த கண்டனங்களை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தனது பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

SC/ST வழக்கு…

இந்த நிலையில் பழங்குடியின சமூகங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில தலைவரான அசோக் ரத்தோட் இது குறித்து புகார் அளித்திருந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கிழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இச்செய்தி தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் தேவரகொண்டா தற்போது “Kingdom” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Arun Prasad

Recent Posts

அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!

மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…

8 hours ago

உங்களுக்கும் மாட்டு கொட்டகைதான்… பாமகவை எச்சரிக்கும் வானதி சீனிவாசன்!!

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…

8 hours ago

வெற்றிமாறன் படத்தில் குட் நைட் மணிகண்டன்? சிம்பு படத்தை குறித்து வெளியான மாஸ் தகவல்!

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…

9 hours ago

இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை? ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகும் கூலி படக்குழு!

காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…

10 hours ago

மிருகத்தனமான தாக்குதல்… கொலை செய்பவர் கூட இப்படி செய்ய மாட்டார் : அஜித் மரணம் குறித்து நீதிபதிகள் வேதனை!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…

10 hours ago

சினிமாவில் விஜய், அஜித் இடங்கள் காலி ஆகாது : பிரபலம் சொன்ன கருத்து!

திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…

10 hours ago

This website uses cookies.