நயன்தாரா மட்டும் இல்ல.. இத்தனை பிரபலங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்களா?

பல்வேறு காரணங்களால் கருவுற இயலாத தம்பதிக்கு, குழந்தை பேறு அளிக்கும் செயல்முறையே வாடகைத்தாய் முறை.

இதில் ஒரு ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டை, கொண்டு மருத்துவ முறையில் கருவை உருவாக்கி, பின் வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி, குழந்தை பெற்றெடுக்கப்படும் முறை வாடகைத்தாய் முறையாகும்.

சட்டப்படி ஆண், பெண் என இருவரும் தங்கள் விந்தணு/ கருமுட்டை மூலம் இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும், சம்பந்தப்பட்ட தம்பதியே அந்தக் குழந்தைக்கு சட்டப்படி பெற்றோர் ஆவர்.

இந்த முறையில் விந்தணு, கருமுட்டை இரண்டும் சம்பந்தப்பட்ட தம்பதியுடையதாக இருப்பதால், வாடகைத்தாயின் மரபு பண்புகளை குழந்தை பெறுவது தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணமான நான்கு மாதங்களில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் குழந்தை பெற்றிருப்பது சமுகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது, மற்ற திரைபிரபாலங்கள் போல இவர்களும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கின்றனர்.

முன்னதாக, பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத்தாய் மூலமாக தங்களது முதல் குழந்தையை பெற்று பெற்றோர்கள் ஆனார்கள்.

மேலும், கடந்த 2011ம் ஆண்டில் அமீர்கான்-கிரண் ராவ் வாடகைத்தாய் மூலமாக ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர்.

இந்தவரிசையில், 2013ம் ஆண்டில் ஷாருக்கான்-கௌரி கான் வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர்.

மேலும், கடந்த 2017ம் ஆண்டில் சன்னி லியோன்-டேனியல் வெபர்இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் மூலமாக பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, கடந்த 2021ல் ப்ரீத்தி ஜிந்தா-ஜென் குட்எனஃப் தாம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள்.

பின்னர், கடந்த 2020ம் ஆண்டு ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா தம்பதியினர் தனது இரண்டாவது பெண் குழந்தையை வாடகைத்தாய் மூலமாக பெற்றெடுத்தனர்.

தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

11 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

12 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

13 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

15 hours ago

This website uses cookies.