தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திமுகவினர், சீமான், விஜய், திருமாவளவன் போன்றோர் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருவதாக கூறினார்.
நடிகர் விஜய், விஜய் வித்யாஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். அதில் இந்தி உள்ளது என கூறியிருந்தார். இது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன், விஜய்க்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் விஜய், பள்ளியை தான் நடத்துகிறார். சாராயக் கடையை அல்ல என கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், அண்ணாமலை பேச்சை கேட்டால் குபீரென்று சிரிப்புதான் வருது. விஜய் பள்ளியை நடத்துவது அவருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் பலருக்கு அது தெரிந்த விஷயம்தான்.
விஜய் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த பள்ளியில் மும்மொழிக் கொள்கை இருந்தால் என்ன தவறு? விருப்பமுள்ளவர்கள் தான் படிக்க சொல்கிறார்களே தவிர, நிச்சயம் படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.