சினிமா / TV

கதவை சாத்திக்கொண்ட அமிதாப் பச்சன்! விடாமுயற்சியால் வந்த வினை! இவருக்கா இப்படி ஆகணும்?

படுதோல்வி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது. அஜித் திரையில் வந்தால் மட்டுமே போதும் என்று பெரும்பாலும் நினைப்பவர்கள்தான் அஜித் ரசிகர்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கே “விடாமுயற்சி” பிடிக்கவில்லை. 

இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. டிரைலர் கூட மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. லைகா நிறுவனத்திற்கு இத்திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த திரைப்படமாகவும் அமைந்தது. 

பட வாய்ப்புகள் இல்லை

“விடாமுயற்சி” திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து மகிழ் திருமேனிக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்பட்டு வந்தது. எனினும் மகிழ் திருமேனி அமிதாப் பச்சனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்ததாம். 

அதாவது “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்தபோதே தனது அடுத்த திரைப்படத்திற்காக அமிதாப் பச்சனை அணுகினாராம். மகிழ் திருமேனி கூறிய கதை அமிதாப் பச்சனுக்கு மிகவும் பிடித்துப்போனதாம். எப்படியும் “விடாமுயற்சி” திரைப்படத்திற்குப் பின் அமிதாப் பச்சனை வைத்து படம் எடுத்துவிடலாம் என ஆவலோடு இருந்தாராம் மகிழ் திருமேனி.

ஆனால் “விடாமுயற்சி”  வெளிவந்து படுதோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து மகிழ் திருமேனியால் அமிதாப் பச்சனை எவ்வளவு முயற்சி செய்தும் நெருங்கமுடியவில்லையாம். ஒரு சந்திப்புக்கு கூட வாய்ப்பு அமையவில்லை என தகவல் வெளிவருகிறது. மகிழ் திருமேனிக்கு இப்படி ஒரு நிலையா என கோலிவுட் வட்டாரங்களில் சோக அலை வீசுகிறதாம். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.