நீ என் கையில கெடச்ச வெட்டி நாய்க்கு போட்ருவேன்…. சீரியல் நடிகருக்காக அடித்துக்கொண்ட ஹீரோயின்ஸ்!

Author: Shree
8 June 2023, 3:58 pm
anshita arnav divya
Quick Share

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள். அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

திவ்யா அர்னவின் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்தார். எவ்வளவோ பேசியும் காதலை தெரிவித்தும் அர்னவ் புறிந்துக்கொண்டு திவ்யாவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அர்னவ் தற்போது சீரியல் நடிகை அன்ஷிதா என்பவரை காதலித்து வருகிறார். இதனால் கடுங்கோபமடைந்த திவ்யா அர்னவ் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அர்னவ் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். இருந்தும் தன்னை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை என திவ்யா மனம் வருந்தி கூறி வந்தார்.

இதையடுத்து திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையின் அழகான போட்டோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார் திவ்யா. இதை பார்த்த ரசிகர்கள் இனிமேலாவது அர்னவ் சேர்ந்து வாழ்வரா? ஈகோவை விட்டு விட்டு குழந்தையை வந்து பாருங்கள் மனைவியுடன் மகிழ்சியாக வாழுங்கள். இப்படி ஒரு தேவதை பிறந்தும் மனம் மாறாத அரக்கனாக இருக்கும் அரன்வை பலர் திட்டி தீர்த்தனர்.

அதன் பின்னர் பேட்டி ஒன்றில் பிறந்த மகளை குறித்து ,மனம் திறந்து பேசிய அரனவ், நான் காதலுக்காக என்னுடைய பெற்றோரை எதிர்த்து குடும்பத்தை எதிர்த்து தான் வெளியே வந்தேன். ஆனால் அந்த காதலால் நான் அதிகமாக வேதனையை அனுபவித்து விட்டேன். அதற்காக இப்ப வரைக்கும் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் மகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளது.

arnav

நான் ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் தவிக்கிறேன். வீடியோ காலிலாவது குழந்தையை பார்க்க வேண்டும். ஆனால், இனியும் திவ்யா உடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை அவர் எனக்கு அவ்வளவு வலிகளையும் வேதனையும் கொடுத்துவிட்டார் என வருத்தத்துடன் கூறினார்.

அதன் பின்னர் பிறந்தாய் தன முதல் கணவருக்கு பிறந்த மகள் மற்றும் அர்னவுக்கு பிறந்த கை குழந்தையுடன் ஷூட்டிங் செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டு திவ்யா அனுதாபத்தை பெற்றிருந்தார். இதனை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் இப்படி தனியா தவிக்க விட்டுட்டியே என அர்னவுக்கு பலர் சாபம் விட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த அவர், அவள் இதனை நாட்களாக தனது முதல் மகளை பொது வெளியிலோ, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கோ… அவ்வளவு ஏன் சோஷியல் மீடியாவில் கூட பதிவிடவில்லை. அப்படியிருக்கும் இப்போ மட்டும் என்ன அக்கறை? அவர் ஒன்றும் அவ்வளவு பத்தினியெல்லாம் கிடையாது என முகத்திரையை கிழித்தார்.

இந்நிலையில் அர்னவ்வின் கள்ளகாதலியான அன்ஷிதா, நீ என் கையில கெடச்ச உன்னை வெட்டி நாய்க்கு போட்ருவேன் என திவ்யாவை மோசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அர்னாவுக்கு ஐ லவ் யூ என கூறி வழிந்து பேசியுள்ள இந்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் அர்னவ் எவ்வளவு மோசமானவர் என்பது தெரிகிறது என நெட்சன்ஸ் இந்த ஆடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

Views: - 628

11

11