சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் பிரசாத்திடம் இருந்து போதைப் பொருள் வாங்கியதாக தெரியவர, நடிகர் ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் கிருஷ்ணாவையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் இருவமே ஜாமீன் கோரி மனு அளித்திருந்த நிலையில் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் இவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இவர்களின் ஜாமீன் மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல், “நடிகர் ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என வாதாடினார். மேலும் நடிகர் கிருஷ்ணா தரப்பில் வாதாடிய வக்கீல், “நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை” என வாதாடினார்.
இதனை தொடர்ந்து காவல்துறை தரப்பில், “இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே ஸ்ரீகாந்தும் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என கூறப்பட்டது. இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது குறித்த உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என கூறினார். அதன் படி இன்று சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வலம் வரும் நிலையில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே…
அனிருத் இசை நிகழ்ச்சியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக தகவல் அனிருத்தின் இசை…
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை…
புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் திமுக வடக்கு மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக…
பண மோசடி வழக்கில் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் சௌபின் சாஹிரை போலீஸார் கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மரண ஹிட்…
தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.…
This website uses cookies.