பிரபல நடிகர் விமலுக்கு நெஞ்சு வலி? மருத்துவமனையில் திடீர் அனுமதி : உடல்நலம் குறித்து விளக்கம்!!!

அதன் பின்னர் சற்குணம் இயக்கிய ‘களவாணி’ திரைப்படம் விமலுக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தனக்கே உரிய இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் எதார்த்த நாயகனாகவும் பக்கத்து வீட்டு பையனாகவும் அனைவரையும் கவர்ந்தார் நடிகர் விமல்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்துக் கதைகள் மற்றும் நகர கதைகளில் நடித்த விமல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்தார்.

களவாணி படத்துக்குப் பிறகு மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தூங்கா நகரம், தேசிங்கு ராஜா மற்றும் கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். அதைபோலவே நடிகர் விமல் நடித்த வாகை சூட வா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விமல் சில படங்களைத் தயாரித்தும் அதில் நடித்தார்.

சமீபத்தில் ஜி 5 ஓடிடி தளத்தில் விமல், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ரிலீஸானது. இந்த வெப் தொடரை புருஸ் லி படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பரவலான நல்ல கவனத்தைப் பெற்றது‌.

விமல் அடுத்ததாக இயக்குனர் அப்துல் மஜீத் இயக்கத்தில் நடித்து வருகிறார். 2002-ல் தளபதி விஜய் நடித்த “தமிழன்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அப்துல் மஜீத். இது போக துடிக்கும் கரங்கள் என்ற படத்திலும் விமல் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சதீஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேலுதாஸ் இயக்க, மணிஷர்மா இசையமைக்கிறார்.

இந்நிலையில் விமல் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் விமல், தன் சமூக வலைதளப் பக்கத்தில், ‛நலமுடன் படப்பிடிப்பில் இருந்து’ என வீடியோ வெளியிட்டுள்ளார்.‌

மேலும் வீடியோவில் தோன்றி, “செய்தி கேட்டேன். எனக்கு நெஞ்சு வலி, மருத்துவமனையில் அனுமதி என்று. அதெல்லாம் கிடையாது நான் நலமாக இருக்கிறேன்.

புதுமுக இயக்குனர் மைக்கேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் 5 நாளில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. இன்னொரு செய்தி பார்த்தேன். நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டில் ரகசிய சிகிச்சை என்று இதெல்லாம் பார்க்கும் போது காமெடியா இருக்கு.

வேண்டாத விஷக்கிருமிகள் இது போல பண்றாங்க. சின்ன பிள்ளை தனமான வேலைகளை விட்டுட்டு பொழைக்கிற வழிய பாருங்க. நீங்களும் வாழுங்க. மத்தவங்களையும் வாழ விடுங்கள்”. என விமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.