90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால், திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.
இதனிடையே வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. இதனால் திருமண வாழ்க்கையே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து லிப்லாக் காட்சிகளில் நடித்து அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். அதையடுத்து தற்போது நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படம் மற்றும் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக Thug Life உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, “நடிகை த்ரிஷா சினிமாவில் அறிமுகம் ஆன புதிதில் மிகவும் அடக்கமாக முன்னேறவேண்டும் என்ற எண்ணத்துடன் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அடுத்தடுத்த படங்கள் ஹிட் அடித்ததும் அம்மணி தலை கால் புரியாமல் ஆடத்துவங்கிவிட்டார்.
சினிமாவின் ஆரம்ப கட்டத்தை அடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்த சமயத்தில் திரிஷாவுக்கு மிகப்பெரிய நடிகரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் படபிடிப்பின் இடைவேளையில் அந்த டாப் ஹீரோவுடன் சேர்ந்து கேரவனில் குடித்துவிட்டு கிறங்கிப்போய் கிடந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் போதை அதிகம் ஆனதும் கேரவனில் இருந்த அந்த டாப் நடிகரோடு வாய் தகராறு செய்தார் திரிஷா. அந்த செய்தி வெளியாகி பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது என செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.