பழிவாங்க துடித்த வரலட்சுமி.. கடைசியில் வைத்த செக்.. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்ட சரத்குமார்..!

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் பிஸியாக தமிழ், தெலுங்கு, மொழி படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சரத்குமாரின் மகள் வரலட்சுமி திருமணம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 90ஸ் சமயத்தில் பீக்கில் இருந்த சரத்குமார் நடிகை நக்மாவுடன் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், இருவரும் காதலித்து வந்தார்கள். அன்று ரகசிய திருமணம் செய்து நக்மாவுக்கு ஈசிஆர் பகுதியில் வீடு வாங்கி கொடுத்தார் என்றும் கூறப்பட்டது நாட்டாமை நடிகர் என்று அப்போதைய மீடியாக்கள் வெளிப்படையாகவே பேசியது உண்மையா? பொய்யா? என்று தெரிவதற்கு பின் சாயாவுடன் விவாகரத்து பெற்றார்.

இதனையடுத்து, நக்மாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து பாம்பே பக்கம் செட்டில் ஆகிவிட்டார். அப்போது, முதல் குடும்பம் இருப்பதே யாருக்கும் தெரியாது. அதன் பின் தான் ராதிகாவை திருமணம் செய்தார். தன் தாயை தனியாக விட்டுவிட்டார் என்று நினைத்த வரலட்சுமி அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து தான் சினிமா துறையை தேர்வு செய்தார்.

அப்போது, ஷங்கரின் பாய்ஸ் படத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமியை தேர்வு செய்திருந்தார்களாம். இடையில், சரத்குமாருக்கு இந்த விஷயம் தெரிந்தது. அதை தடுத்து, நிறுத்திவிட்டு அதற்க்கு பின்னர் தான் ஜெனிலியாவை அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த கோவமும் வரலட்சுமிக்கு அதிகமாகி போடா போடி படத்தில் நடிக்க அவரே சென்று வாய்ப்பு வாங்கியிருக்கிறார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு தனியார் சேனலில் வரலட்சுமி நடித்த பாலாவின் தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கியபோது, அந்த விருதை தன்னுடைய அம்மாவின் கையால் பெற வேண்டும் என்று அவரையும் அழைத்து சென்றிருந்தார். அப்போது, மேடையில் இருந்த பாலா நடிகை வரலட்சுமியின் அம்மா சாயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருப்பார். இதற்கு காரணம், அம்மா போல் நினைத்துதான் காலில் விழுந்தேன் என்று பாலா பேட்டியில் கூட தெரிவித்து இருந்தார் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இந்த செய்தியில் குறிப்பிட்டு உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய செய்யாறு பாலுவின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.