தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு அரியவகை நோயால் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவில் நெப்போலியன் சென்று வந்த நிலையில், தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இதனிடையே, தனுசுக்கு திருமணம் குறித்து வெளியானதில் இருந்து பலவிதமான விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது. இந்நிலையில், சினிமா விமர்சகரான செய்யாறு பாலு திருமணம் குறித்து இப்படியா விமர்சனம் செய்வது என்று பேட்டி ஒன்றில் கேட்டுள்ளார். அதாவது, தற்போது தனுசுக்கு 25 வயதாகும் நிலையில் அவருக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நெப்போலியன் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணிற்கும் தனுஷ்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார்.
தனுஷ் இந்தியா வர முடியாததால் அவர்களின் திருமணம் வீடியோ காலில் நடைபெற்றது. தற்போது, சோசியல் மீடியாவில் தனுசுக்கு திருமணம் செய்வது தவறு என்றும், அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. பணத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி வீணாக்கலாமா என்ற பேச்சும் இணையதளத்தில் பரவ தொடங்கின.
குறிப்பாக, டாக்டர் காமராஜ் இந்த நோய் உள்ளவர் 12 அல்லது 18 வயதிலேயே இறந்து விடுவார்கள். இவர் 25 வயது வரை இருப்பதே பெரிய சாதனை என்று பேசியிருந்தார். இதற்கு செய்யாறு பாலு பேசுகையில், நெப்போலியன் தனது மகனுக்கு இப்படி ஒரு நோய் என்று தெரிந்ததும் குடும்பமே உடைந்து போய்விட்டது. தனது மகனுக்காக சினிமா அரசியல் என எல்லாத்தையும் விட்டுவிட்டு அமெரிக்கா சென்று அங்கு செட்டில் ஆனார்.
தனது மகனுக்காக பார்த்து பார்த்து வீடு கட்டி உள்ளார். ஒரு அப்பா அம்மாவான இவர்கள் தனுசை பார்த்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு மனைவி கணவனை பார்த்துக் கொள்வது போல் வராது என்பதற்காக தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இந்த திருமணத்தை விமர்சிக்கலாமா தனுஷால் நடக்க முடியாவிட்டாலும் அவர் தனது வேலைகளை தானே செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறார். அவர் தற்போது, ஐடி கம்பெனியை நிர்வகித்தும் வருகிறார் என்று செய்யாறு பாலு பேசியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவருடைய இயலாமையை இப்படி கீழ்த்தரமாக விமர்சிப்பது மிகவும் அநாகரிகமானது என்று கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.