சினிமா / TV

வைரமுத்துவை பத்தி என் கிட்டதான் கேட்கணுமா? பத்திரிக்கையாளர் மீது சீறிய சின்மயி…

Me Too

வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக “Me Too” குற்றச்சாட்டு ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு முன்வைத்தார் பாடகி சின்மயி. பாடகி சின்மயி அவ்வாறு குற்றச்சாட்டு வைத்தது சினிமாத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனை தொடர்ந்து வைரமுத்துவிற்கு பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்துப்போனது. 

ஆனால் இன்னொரு பக்கம் பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் திரைப்படங்களில் பாடுவதற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய “முத்த மழை” பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் மீண்டும் சின்மயி பேசுப்பொருளானார்.

பத்திரிக்கையாளர் மீது சீறிய சின்மயி…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை திறப்பு  விழாவில் கலந்துகொண்ட சின்மயி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஒரு பெண் பத்திரிக்கையாளர், “தேசிய விருது வழங்கப்பட்டதில் அதிருப்தி இருப்பதாக வைரமுத்து தெரிவித்திருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என கேள்வி எழுப்பினார். 

அப்போது சற்று கோபமான சின்மயி, “வைரமுத்துவை பற்றி என்னிடம் கேட்டேதான் ஆகவேண்டுமா? உலகத்தில் வேறு யாருமே இல்லையா வைரமுத்துவை பற்றி மட்டுந்தான் கேட்க வேண்டுமா?” என சீறினார். 

அதன் பின் சற்று அமைதியடைந்த சின்மயி, “நீங்கள் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி கேள்வி கேட்கிறீர்கள்? இதெல்லாம் தேவையா? ஏழு வருடமாக என்னை Ban செய்திருக்கிறார்கள். அதை பற்றி ஏன் நீங்கள் கேட்கவில்லை?” எனவும் கேள்வி எழுப்பினார். சின்மயி இவ்வாறு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.