மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது.
இத்திரைப்படத்தில் பாடகி தீ பாடிய “முத்த மழை” என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. ஆனால் “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்பாடலை சின்மயி பாடினார். சின்மயியின் குரல் ரசிகர்களை பெரிதும் வசீகரித்த நிலையில் “தீயின் குரலை விட சின்மயியின் குரல் லயிக்கவைக்கிறது” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சின்மயி பாடிய “முத்த மழை” பாடல் இணையத்தில் பலரால் ரசிக்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
“முத்த மழை” பாடலை தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சின்மயிதான் பாடியிருந்தார். ஆனால் தமிழில் தீ பாடியிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் “ஏன் சின்மயியை தமிழில் பாடவைக்கவில்லை?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் 2018 ஆம் ஆண்டு வைரமுத்து உள்ளிட்ட சினிமாத்துறையினர் பலரின் மீது “Me Too” குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார் சின்மயி.
இதனை தொடர்ந்து டப்பிங் யூனியனில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். Me Too பிரச்சனையை பூதாகரமாக எழுப்பிய காரணத்தினால்தான் அவர் வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டாலும் அவர் சரியாக சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தால்தான் வெளியேற்றப்பட்டார் என டப்பிங் யூனியன் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் பாட எந்த வாய்ப்பும் வரவில்லை. எனினும் இந்த தடையை எல்லாம் மீறி “லியோ” திரைப்படத்தில் திரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுக்க அவருக்கு வாய்ப்பு வழங்கினார் லோகேஷ் கனகராஜ். சின்மயியிக்கு இருக்கும் தடையால்தான் அவரை “தக் லைஃப்” திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் பாட வைக்க முடியவில்லை என பலரும் கூறி வருகின்றனர். எனினும் “முத்த மழை” பாடலில் சின்மயியின் குரல் ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில் பாடகி தீ ஓரங்கட்டப்பட்டுள்ளதாக பலர் விமர்சனம் வைப்பதும் குறிப்பிடத்தக்கது.
டாப் ஹிட் படங்கள் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் “வாலி”. இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட்…
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் நிறைவு…
முன்னணி காமெடி நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் பெரிதும்…
தங்க நகைக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி புதிய விதிகளை கொண்டு வந்ததது, நகைகளின் உரிமையை நிரூபிக்க ரசீது அல்லது உரிமை…
டாஸ்மாக் முறைகேடு டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது…
This website uses cookies.