ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் இராவணனாக “கேஜிஎஃப்” புகழ் யாஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். நமித் மல்ஹோத்ரா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்து இசையமைக்கிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 2026 ஆம் ஆண்டு தீபாவளியிலும் இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளியிலும் வெளியாகவுள்ளது.
நடிகர் ரன்பீர் கபூர் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது மாட்டிறைச்சி தனக்கு பிடித்த உணவு என கூறியிருந்தார். இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்புடுபவர் இராமராக நடிப்பதா? என்று விமர்சனங்கள் எழுந்தன. ஜெய்பூர் டயலாக்ஸ் என்ற எக்ஸ் தளம், “மாட்டுக்கறி சாப்பிடுபவர் இராமராக நடிக்கிறார். பாலிவுட்டுக்கு என்ன ஆயிற்று?” என கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு பாடகி சின்மயி, “கடவுளின் பெயரை பயன்படுத்திக்கொண்டு சாமியாராக வலம் வருபவர்கள் பாலியல் வழக்கில் சிக்கினாலும் ஓட்டு வங்கிக்காக அவர்களை பரோலில் வெளியே விடுகிறார்கள், அப்படி இருக்க ஒருவர் சாப்பிடும் உணவுதான் பெரிய பிரச்சனையா?” என கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார். சின்மயியின் பதிலடிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…
பண மோசடி வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
மனதை கொள்ளைக்கொண்ட நிலா… 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்…
This website uses cookies.