தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நட்சத்திர அந்தஸ்தை பிடித்து இருப்பவர் தான் நடிகர் சிரஞ்சீவி. 68 வயதாகும் இவருக்கு இப்போதும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உண்டு. திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி அரசியல்வாதியாகவும் இவர் இருந்து வருகிறார்.
பத்மபூஷன் விருது, 7 ஃபிலிம் சார் விருது , தெலுங்கு திரைப்பட விருதுகள், என பல்வேறு விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகராக பார்க்கப்பட்டுவருகிறார். இப்படி நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் சிரஞ்சீவி பொதுவெளியில் மிகவும் மோசமாக இவ்வளவு கீழ் தரமாகவா நடந்து கொள்வது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாக நெட்டிசன்ஸ் சிரஞ்சீவியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அதாவது சிரஞ்சீவியும் அவரது மனைவி சுரேகாவும் விமான நிலையத்தில் உள்ள லிப்ட்டில் இருந்து வெளியேறும் போது அங்கிருந்து இண்டிகோ ஏர்லைன் ஊழியர் ஒருவர் சிரஞ்சீவி உடன் செல்பி எடுக்க. முயல்கிறார். அப்போது சிரஞ்சீவி அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செல்ல… மீண்டும் அந்த ஊழிய சிரஞ்சீவியிடம் செல்பி கேட்க உடனே கடுப்பான சிரஞ்சீவி அந்த நபரை முதுகில் பிடித்து தள்ளி விட்டு செல்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக எங்களைப் போன்ற ரசிகர்களால் தான் நீங்கள் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறீர்கள்… எங்களை உதாசீனப்படுத்தினால் நீங்கள் சினிமாவில் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என சாபம் விட்டு வருகிறார்கள்.
ஆனால், இந்த வீடியோவை பார்த்த சிரஞ்சீவி ஆதரவாளர்கள் பலர் நீண்ட நேரம் விமான பயணத்திற்குப் பிறகு மிகவும் சோர்வடைந்து வருவார்கள் அவர்களை இப்படி தொந்தரவு செய்வதே முதலில் தவறு என அவருக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.