90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களின் வில்லன் நடிகராக பெரும் அளவில் பிரபலமானவர் நடிகர் “கபாலி” எனும் பொன்னம்பலம். இவர் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் நடிக்க துவங்கி செந்தூரப் பாண்டி, நாட்டாமை, கூலி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், சண்டை பயிற்சியாளாகவும் இருந்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார்.
அதாவது, என் அப்பாவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள், அதில் மூன்றாவது மனைவியின் மகன் என் சொந்த அண்ணன் என்னுடைய மேனேஜராக பணிபுரிந்தார். அவரை அண்ணன் என்ற முறையில் நான் பெரிதாக நம்பினேன்.
ஆனால், அவர் எனக்கு வில்லனாக இருந்துள்ளார். ஆம், எனக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ள முயற்சித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் என் வீட்டுப் பின்புறம் குழிதோண்டி அதில் என்னை வைத்து பில்லி சூனியம் செய்த என்னுடைய லுங்கி, என்னுடைய பொம்மை மற்றும் சில ஊமத்தை காய்கள் எல்லாம் போட்டு புதைத்துள்ளார்.
அதாவது, என்னை சாகடித்து குழி தோன்றி புதைப்பது போல உயிரோடு இருக்கும் போதே எனக்கு சூனியம் வைத்தார். அதனால் தான் நான் இப்போது கிட்னி கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்தேன். இதனை தொடர்ந்து உடல் நலம் தற்போது தேறி வருகிறேன்.
இதனிடையே, தனது சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாக நடிகர் பொன்னம்பலம் வீடியோ வெளியிட்டதை அடுத்து, ஏராளமான பிரபலங்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.
தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள நடிகர் பொன்னம்பலம், தனக்கு உதவியவர்கள் பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். அதில் சிரஞ்சீவி செய்த உதவி குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
கிட்டத்தட்டா 45 லட்சம் செலவு பண்ணினார் என்றும், ஏதோ ஒரு லட்சம் செலவு பண்ணுவார் என நினைத்து போன தனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தது நெகிழ வைத்ததாக நடிகர் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும், அதேபோல் தனுஷும் தன்னிடம் பேசிக் கொண்டிருந்தபோதே அக்கவுண்டில் பணம் அனுப்பி உதவினார் எனவும், அதேமாதிரி அர்ஜுன் சாரும் உடனே தனக்கு உதவினார். இவர்களெல்லாம் நான் எதிர்பார்க்காமல் உதவியவர்கள்.
அதேபோல் சரத்குமாரிடம் ஒருமுறை போன் செய்து கையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொன்னேன். உடனே ஆபரேஷனுக்கு உதவினார். அவருடன் படத்தில் நடித்தபோது தங்கள் இருவருக்குள்ளும் சின்ன சின்ன மோதல்கள் இருந்த நிலையிலும் அவர் இன்று வரை எனக்கு உதவி செய்து வருகிறார் என தெரிவித்தார்.
அதேபோல் அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் தனது உடல்நலம் குறித்து ஒரு போன் பண்ணிகூட விசாரிக்கவே இல்லை என பொன்னம்பலம் வருத்தப்பட்டுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.