சினிமா / TV

சிரஞ்சீவியை காண 300 கிமீ சைக்கிளில் பயணம் செய்த பெண்! கனவு நினைவாகிய அழகிய தருணம்!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார்

தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. பல கோடி ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் சிரஞ்சீவி எப்போதும் தனது ரசிகர்களிடம் மிகுந்த அன்பு காட்டுபவர். அந்த வகையில் தற்போது தன்னை காண வேண்டும் என்ற ஆசையோடு பல மைல் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்த ரசிகை ஒருவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

300 கிமீ சைக்கிளில் பயணித்த ரசிகை

ஆந்திராவின் ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது ஊரில் இருந்து சிரஞ்சீவியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற கனவோடு சைக்கிளில் 300 கிமீ பயணித்து ஹைதராபாத் வந்துள்ளார். இவ்வாறு தனது ரசிகை ஒருவர் 300 கிமீ வரை பயணம் செய்து தன்னை பார்க்க வந்த செய்தியை அறிந்த சிரஞ்சீவி தனது ரசிகையை மகிழ்ச்சியான புன்னகையுடன் வரவேற்றார். 

தனது கனவு நிறைவேறிய உற்சாகத்தில் உலகையே மறந்த ராஜேஸ்வரி சிரஞ்சீவிக்கு ராக்கி ஒன்றை கட்டினார். சிரஞ்சீவியோ தனது ரசிகைக்கு புடவையை பரிசாக அளித்தார். மேலும் ராஜேஸ்வரியின் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் சிரஞ்சீவி ஏற்பதாக உறுதியளித்தார். இச்சம்பவம் ரசிகர்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.