சமீப காலமாக இயக்குனர் மிஷ்கின் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களை பல விழா மேடைகளில் விமர்சிக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களை ஒருமையில் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
விஷாலுக்கும் மிஷ்கினுக்கு இடையே, சில வருடங்களுக்கு முன்பு “துப்பறிவாளன் 2” திரைப்படத்தில் சில சச்சரவுகள் எழுந்தன.
ஒரு திரைப்பட விழாவில் மிஷ்கின் விஷாலை குறிப்பிட்டு பேசியபோது:- “விஷால் ஒரு பொறுக்கி. அவனுக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும்?” போன்ற தகாத வார்த்தைகளால் விஷாலை சாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் சமீபத்தில் “கலகத் தலைவன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் “குட்டி சுவராக போன ராஜேஷ் போன்ற இயக்குனர்” என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தியது. அங்கே இருந்தவர்களிடம் இது பெரும் வருதத்தை ஏற்படுத்தியது. இதனால், இணையத்தில் பலரும் மிஷ்கினின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும், இயக்குனர் மிஷ்கின் தனது பேட்டிகளில் பல இயக்குனர்களையும் நடிகர்களையும் வாடா போடா என்று ஒருமையில் பேசுவது அனைவரிடத்திலும், அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒருமையில் பேசுவது இயக்குனர் மிஷ்கினின் வழக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்நதார் அதில், “இயக்குனர் மிஷ்கின் ஏன் பொது மேடைகளில் எல்லாரையும் ஒருமையில் வாடா போடா என பேசுகிறார்? எனவும், அவருக்கு நடிகர் சங்கத்தில் இருந்து எச்சரிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கா?” என்று ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.
அந்த கேள்விக்கு பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் “இந்த விசயத்தில் நடிகர் சங்கம் தலையிட்டு எந்த அறிவுரையும் மிஷ்கினுக்கு கூறமுடியாது என்றும், ஆனால் மிஷ்கினால் இது போன்று பேசுவதை தவிர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என பதில் கூறியுள்ளார்.
மேலும் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசியதாவது “மிஷ்கினை பொறுத்தவரைக்கும் அவர் ஒரு பொறுப்புள்ள இயக்குனர் என்றும், அப்படிப்பட்டவர் பொது மேடைகளில் மற்ற நடிகர்களையும் இயக்குனர்களையும் ஒருமையில் பேசுவது அவ்வளவு நாகரீகமாக இல்லை என்பதை மிஷ்கின் உணர்ந்தால் நன்றாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.