சினிமா / TV

50 ஆண்டுகளில் 170 திரைப்படங்கள்! ரஜினிக்கு வளைத்து வளைத்து வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்!

நடத்துனர் டூ சூப்பர் ஸ்டார்

கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக தனது கெரியரை தொடங்கிய ரஜினிகாந்த், சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகராக ஆகவேண்டும் என்று சென்னைக்கு ஓடி வந்தார். சென்னையில் சினிமா பட்டறையில் நடிப்பு பயின்று பாலச்சந்தரின் “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 

இத்திரைப்படம் வெளியான ஆண்டு 1975 ஆகஸ்ட் 15. தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்த் தனது தனித்துவமான நடிப்பாலும் கவர்ந்திழுக்கும் ஸ்டைலாலும் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த், தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவரது கடும் உழைப்பு அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. 

170 திரைப்படங்கள்!

இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள “கூலி” திரைப்படம் அவரது 171 ஆவது திரைப்படமாகும். அந்த வகையில் சினிமா கெரியரில் தனது 50 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறார் ரஜினிகாந்த். 

இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துச் சொல்லி வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் “50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது அபூர்வம். ரஜினி நீங்கள் ஓர் அபூர்வ ராகம்” என தொடங்கும் ஒரு நீண்ட கவிதையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

இதனை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “திரைத்துறையில் வெற்றிகரமாக 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் அன்புக்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனதார வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 

மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திரைத்துறையில் 50 ஆண்டுகால மகத்தான சாதனையை நிறைவு செய்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயாவை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து “கூலி” படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், தனது எக்ஸ் பக்கத்தில், “எனது பயணத்தில் கூலி திரைப்படம் மிகவும் ஸ்பெஷலான திரைப்படமாக இருக்கும். இந்த வாய்ப்பிற்கும் படத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பகிர்ந்துகொண்ட உரையாடல்களுக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இவை நான் எப்போதும் மறக்க முடியாத தருணங்கள்” என கூறியுள்ளார். 

மேலும் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், “தனது திறமையால் சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு கடக்கும் எனது நண்பரே. சினிமாவில் இன்று 50 வருடங்களை நிறைவு செய்கிறீர்கள். நமது சூப்பர் ஸ்டாரை நான் பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன். மேலும் இந்த பொன் விழாவில் கூலி உலகளாவிய வெற்றிபெறும் என வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து ஆமிர்கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.