ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தன்னுடைய மகள் ஆரத்யாவுடன் மும்பையில் தனியாக வசித்து வருவதாக பல்வேறு செய்திகள் சமீப காலமாக வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த அம்பானியின் மகன் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனியாக மகளுடன் பங்கேற்றார். ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மாமியார் குடும்பத்துடன் ஒதுங்கி இருந்த வீடியோக்களும் வெளியாகி வைரலானது.
ஆனால், சமீபத்தில் அபிஷேக் பச்சன் வாங்கிய காரில் ஐஸ்வர்யா ராய்க்கு பிடித்த நம்பர் பிளேட்டை வாங்கி போட்டிருக்கிறார் என்று யோஜன்ஸா என்ற பிரபலம் ஒருவர் செய்திருந்தார்.
சமீபத்தில், பயில்வான் ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் பிரிய முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தான் என்று கூறியிருந்தார். மேலும், அபிஷேக் பச்சன் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக கூறியிருந்தார்.
மேலும், குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஐஸ்வர்யாராய் அபிஷேக் பிரிவுக்கு என்ன காரணம் என்று பேசியுள்ளார்.
அதில், பாலிவுட் நடிகை ரேகாவிடம் ஐஸ்வர்யா ராய் கொண்டிருந்த நட்புதான் இவர்கள் பிரச்சனைக்கு காரணம் என்றும் ரேகா மற்றும் அமிதாப்பச்சன் காதல் விவாகரத்தில் ரேகா மற்றும் ஜெயா பச்சன் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்படி ஒரு நிலையில், ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நட்பு கொண்டிருப்பது குடும்பத்தில் விரிசல்களை ஏற்படுத்தியதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். ஆனால், ஐஸ்வர்யா இதை மறுத்ததுடன் தன்னுடைய கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
இருவரும் பிரிவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், இருவரும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் பிரிய மாட்டார்கள் இணைந்து வாழும் முடிவெடுப்பார்கள் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.