சினிமா / TV

ரஜினிக்கும் சத்யராஜிற்கும் அப்படி என்ன கருத்து முரண்? ஒரு பிளாஷ்பேக் போவோமா?

சத்யராஜுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு?

கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற “கூலி” திரைப்படத்தின் Pre Release Event-ல் ரஜினிகாந்த் சத்யராஜ் குறித்து பேசியபோது, “எனக்கும் சத்யராஜுக்கும் இடையே கருத்து ரீதியான முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் மனசுல பட்டதை சொல்லிடுவார். மனசுல பட்டதை சொல்றவங்களை நம்பலாம். ஆனால் மனசுக்குள்ளேயே வச்சிட்டு இருக்குறவங்களை நம்ப முடியாது” என பேசியிருந்தார். 

ரஜினிகாந்தும் சத்யராஜும் இணைந்து 1980களில் “மிஸ்டர் பாரத்”, “நான் சிகப்பு மனிதன்”, “மூன்று முகம்” போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மீண்டும் “கூலி” திரைப்படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இவர்கள் இணைந்து நடிக்காததற்கு முக்கிய காரணம் இவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுதான் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுவது உண்டு. 

இந்த நிலையில்தான் “கூலி” திரைப்படத்தின் விழாவில், “எனக்கும் சத்யராஜுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன” என பேசியுள்ளார். ரஜினிகாந்த் இவ்வாறு கூறியது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யராஜ் கர்நாடகா பிரச்சனையில் ரஜினிகாந்தை ஒரே மேடையில் தாக்கிப் பேசிய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம். 

ரஜினியை சாடிய சத்யராஜ்!

பல வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் பலர் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் தமிழகத்தில் தமிழ் திரை நடிகர்கள் பலர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சத்யராஜ், “பொதுவாக சில மேடைகளில் சில பேரின் பெயரை சொன்னால் கைத்தட்டல் வாங்கலாம். யாருடைய பெயரை சொன்னால் நீங்கள் எல்லாரும் கைத்தட்டுவீர்களோ அவர்கள் பெயரை சொன்னால் கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் அப்படி அவர்கள் பெயரை சொல்லி கைத்தட்டல் வாங்குவதற்கு பதிலாக நான் நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம். 

கர்நாடகாவில் தமிழனை அடிக்கிறார்கள், அதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறோம், ஒரு நடிகனின் பெயரை சொல்லி கைத்தட்டல் வாங்குவதற்காக நான் வரவில்லை” என ரஜினிகாந்தை ஒரே மேடையில் நேரடியாகவே தாக்கிப்பேசினார். 

மேலும் அந்த கூட்டத்தில் பேசிய சத்யராஜ், “கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் என்று ஒருவர் இருக்கிறான். அவன் மிகப்பெரிய காமெடியன். நம்ம வடிவேலு எல்லாம் அவர் முன் தோற்றுப்போய்விடுவார். அந்த வாட்டாள் நாகராஜ் சொல்கிறான், ஈரோடு, கிருஷ்ணகிரி, சென்னை போன்ற பகுதிகள் கர்நாடகாவில் சேரவேண்டும் என்று சொல்கிறான். அப்படி என்றால் நாம் என்ன விரல் சூப்பிக்கொள்வதா?  வாட்டாள் நாகராஜ் எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் என்று நமக்கு சம்பந்தப்பட்ட ஒருத்தரே ஒரு காலகட்டத்தில் பேசியிருக்கிறார். நாம் கர்நாடகாவிற்கு சென்று எனக்கு பிடித்த பேச்சாளர் பேரறிஞர் அண்ணா என்று சொல்லமுடியுமா?” என ரஜினிகாந்தை நேரடியாகவே தாக்கிப் பேசியிருந்தார் சத்யராஜ். அந்த சமயத்தில் சத்யராஜ் ரஜினிகாந்த் குறித்து பேசியது பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.