தமிழ்த் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சின்னி ஜெயந்த். 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “கை கொடுக்கும் கை” படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரைப் பயணம், இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான ஆர் ஜே பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படம் வரை தொடர்கிறது. யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் “போட்” திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் போது தனது மகனை சினிமாவில் களமிறக்குவதற்கு பதிலாக சப் கலெக்டராக்கி அழகு பார்த்தார் நடிகர் சின்னி ஜெயந்த்.
இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த், தொடக்கத்தில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றினார். இப்போது விழுப்புரம் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
தற்போது ஸ்ருதன் ஜெய் ஜெயந்திற்கு திருமணம் நடக்கவுள்ளது, திருமண பத்திரிக்கை வேலையில் பிஸியாக இறங்கியுள்ளார் நடிகர் சின்னி ஜெயந்த்.
சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த அப்பாவாகவும் சின்னி ஜெயந்த் இருக்கிறார்.. யூபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 75வது இடம் பெற்று சின்னி ஜெயந்த் மகன் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.