இசைஞானி இளையராஜாவின் மகனும் தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மீது முகமது ஜாவித் என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அதிரடியான புகார் ஒன்றை கூறி இருக்கிறார். அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வசித்து வருகிறார்.
இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இதுநாள் வரை அவர் இந்த வீட்டிற்கு வாடகை வாங்கி கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் வரை பாக்கி கிடக்கிறது. இது குறித்து எனது சகோதரி பலமுறை அவரிடம் கேட்டுக் கூட அவர் கொடுக்க மறுத்திருக்கிறார் நான் வாடகை பணம் கேட்பதற்கு செல்போனில் அழைத்தபோதும் அவர் போனை எடுக்கவில்லை.
அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறினார்கள். எனவே அவரிடம் இருந்து வாடகை பாக்கி மற்றும் வீடு சேதத்துக்கான இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கூறியிருக்கிறார். இதை அடுத்து இந்த புகாரை போலீஸ் விசாரணை நடத்த துவங்கியிருக்கின்றனர்.
இந்த புகார் ஆனது தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இந்த விஷயம் தற்போது கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மிகப்பெரிய இசை குடும்பத்தை சேர்ந்த யுவன் சங்கர் ராஜாவிடம் பணமா இருக்காது?
ஏன் இப்படி அடுத்தவர் வயிற்றிச்சலுக்கு ஆளாகிறார்? என கூறிய யுவன் சங்கர் ராஜாவை பலரும் திட்டி தீத்து விமர்சித்து வருகிறார்கள். ஒரு படத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் யுவன் சங்கர் ராஜாவால் வாடகை பணம் கொடுக்கும் முடியவில்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. யுவன் சங்கர் ராஜா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.