கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் இந்த நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்த மகேஷ் பாபுவிற்கு அமலாக்கத்துறையில் இருந்து நோட்டீஸ் பறந்தது. அதாவது இந்நிறுவனத்தின் விளம்பரத்தில் மகேஷ் பாபு நடித்த நிலையில் மகேஷ் பாபுவுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்ட பணம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் தற்போது நில மோசடி புகார் ஒன்றில் நுகர்வோர் ஆணையம் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது மகேஷ் பாபுவின் புகைப்படத்தை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்ததாக ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் மருத்துவர் ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து இவ்விவகாரத்தில் மகேஷ் பாபுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் விளம்பரத்தின் புரொமோஷனில் நடித்ததற்காக மகேஷ் பாபுவுக்கு ரூ.3.4 கோடி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
மனதை கொள்ளைக்கொண்ட நிலா… 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்…
This website uses cookies.