துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் “லோகா சேப்டர் 1; சந்திரா”. இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் சாண்டியின் கதாபாத்திரம் பெங்களூர் பெண்கள் குறித்து பேசும் ஒரு வசனம் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் “லோகா சேப்டர் 1” படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் பேசிய வசனம் கர்நாடக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அறிகிறோம். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வசனம் விரைவில் நீக்கப்படும். தங்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.