சினிமா / TV

18 வயசுக்கு கீழ உள்ளவங்க கூலி பார்க்க கூடாது? லோகி அப்படி என்னதான் பண்ணிவச்சிருக்காரோ?

ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரெயிலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. 

இத்திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துகொண்டே வருகிறது. இந்த நிலையில் “கூலி” திரைப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி படத்துக்கு “A” சர்ட்டிஃபிக்கேட்டா?

அதாவது “கூலி” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு “A” சான்றிதழ் அளிக்கப்பட்டதே இல்லை. 1980களில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படங்களான “மூன்று முகம்”, “சிவா” ஆகிய திரைப்படங்களுக்கு “A” சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இல்லவே இல்லை என அடித்து சொல்லலாம்.

அந்த வகையில் “கூலி” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இத்திரைப்படத்தில் அதிக அளவு வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என யூகிக்க முடிகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.